Search This Blog

Saturday, September 18, 2010

விசும்பு- ஜெயமோகனின் அறிவியல் புனை கதை தொகுப்பு - ஒரு பார்வை

கடந்த சில நாட்கள் முன்பு ஜெயமோகன் சுஜாதா பற்றி தன்னுடைய வெப்சைட்ல் எழுதிஇருந்தர். சிலர் சரியாக தப்பாக புரிந்துகொண்டு, ஜெயமோகன் - இக்கு ஏன் இந்த வேலை என்று கோவம் கொண்டனர். இந்த நேரத்தில் எனக்கு ஜெயமோகனின் விசும்பு எனும் அறிவியல் புனை கதை தொகுப்பு கிடைத்தது இந்த புத்தகத்தை சுஜாதாவிற்கு சமர்ப்பணம் செய்திருந்தார் (அறிவியலின் கதைகளின் முன்னோடி என குறிப்பிட்டு) , சரி கதைக்கு வருவோம்..
எல்லா கதைகளும் ஒரே மாதிரியான கதை ஓட்டம். திடுக்கிடும் முடிவு. சில கதைகள் இந்திராசௌந்திரராஜன் கதை படிப்பது போல இருந்தது. ஆனால் இயற்கை, ஆன்மீகம் பற்றி எழுதும்போது ஜெயமோகன் அவர்களின் வீச்சுஐ நன்றாக உணரமுடிந்தது. இயற்கை, ஆன்மீகம் பற்றி அவருடைய புரிதல் தான் பலருக்கும் பிடித்த ஒன்று. இந்த புத்தகம் Singapore  National Library இல் கிடைக்கிறது,, படிச்சுபாருங்க தோழர்களே தோழிகளே, நன்றி

1 comment:

Veli said...

நன்றி ers

Post a Comment